தூத்துக்குடி,ஜன.13:
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கியில் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது குறித்து வங்கி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா, தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கி தாஇமை அலுவலகத்தில் 12.01.2021 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வங்கியின் துணைத்தலைவர், வங்கியின் பொதுமேலாளர், துணைப்பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ண கோலங்களிட்டு பொங்கல் வைத்து திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.