நாலுமாவடியில் அற்புத விடுதலைப் பிரார்த்தனை! சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது.

Nalumavadi

நாலுமாவடியில் அற்புத விடுதலைப் பிரார்த்தனை! சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது.

நாலுமாவடியில் அற்புத விடுதலைப் பிரார்த்தனை! சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது.

நாசரேத்,ஆக.10:நாலுமாவடி அற்புத விடுதலைப் பிரார்த்தனை சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலு மாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியம் தேவனுடையக் கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் காலை 9:30 மணி முதல் மாலை 2:30 மணி வரை நடை பெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் குழுவினர் சிறப்புப் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து வியாதியஸ்தர்களுக்காக சிறப்பு பிரார்த்த னையை ஏறெடுத்தார்.இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள்செய்திருந்தனர்.