அய்யா வைகுண்டசுவாமி விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை -தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
Vaikundasawmy
அய்யா வைகுண்டசுவாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 04.03.2026 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 194 வது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி (04.03.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 04.03.2026 புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.03.2026 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
nadunilai.com