பனை விதைகளை விதைத்த பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி மாணவர்கள்.!

N.S.S

பனை விதைகளை விதைத்த பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி மாணவர்கள்.!

குரும்பூர், நல்லான்விளையில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை விதைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நல்லான்விளையில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சாலைகளை சுத்தம் செய்தல், சாலை ஓரங்களில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், செல்வ விநாயகர் கோயிலில் உழவாரப்பணி செய்தல், மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தல், பனை விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். 

மேலும் இதில், சிறுசேமிப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணிகள் நடந்தது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜெசுதாசன் செய்திருந்தார். என்.எஸ்.எஸ். மாணவர்களின் பணியை செயலாளர் செல்வம், ஸ்ரீ கணேசர் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ், தலைமையாசிரியர் வித்யாதரன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.