"ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சுதான்" - மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரெய்லர்!

rajinikanths-jailer-movie-trailer-released-in-today

"ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சுதான்" - மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரெய்லர்!
"ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சுதான்" - மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரெய்லர்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம், வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

jailer movie

ஏற்கெனவே, இப்படத்தின் ‘காவாலா’, ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அண்மையில் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ’ஜெயிலர்’ படத்தின் ட்ரெய்லர் (ஷோகேஸ்) இன்று வெளியானது.
jailer movie

இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ரஜினியின் மாஸ் தோற்றமும், அவர் பேசும் வசனங்களும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. குறிப்பாக, ’ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது... வீச்சுதான்’ என்கிற வசனமும், ‘இத்தோடு நிறுத்திக்களாமே.. ரொம்ப தூரம் போயிட்டேன்.. முடிச்சிட்டுத்தான் வருவேன்’ என்கிற வசனமும் ரஜினி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. படத்தில் அவரது பெயர் டைகர் முத்துவேல் பாண்டியன் என வருகிறது. படத்தில் நடிகர்கள் யோகிபாபு, சரவணன், ஜாக்கி ஜெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கேரக்டர்கள் வருகிறது. ஆனால், மோகன்லால், சிவக்குமார் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களை ரிவில் செய்யவில்லை.