நாசரேத் பகுதியில் சுதந்திரதின கொண்டாட்டங்கள்.., சதூரங்கபோட்டியில் சாதனை மாணவன்..

Nazareth Independence day

நாசரேத் பகுதியில் சுதந்திரதின கொண்டாட்டங்கள்.., சதூரங்கபோட்டியில் சாதனை மாணவன்..

நாசரேத்,ஆக.16: நாசரேத் நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

77-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு  நல்ல சமாரி யன் மனநல காப்பகத்தில் தேசிய கொடியை   நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் எபினேசர் ஏற்றினார். பின்  அதைத் தொடர்ந்து நாசரேத் வணிக சங்க செயலாளர் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து இல்ல பொறுப்பா ளர் ஜோசப் சிறப்பு விருந்தி னர்களுக்கு  பொன்னாடை கள் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளி யில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஞானசிங் எட்வின் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை கனக ரதி பெப்பின்,உதவி ஆசிரி யர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அளவிலான சதுரங்க போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு இடையே யான சதுரங்கப்போட்டி  நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடந்தது. இதில் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி 4ம் வகுப்பு மாணவர் டெமெட்ரியஸ்   கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை   பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவரை  பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் கலா ஜேனட், துணை முதல்வர்  ரோஸ்லின்  மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர். 

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அளவிலான சதுரங்க போட்டியில் சாதனை படைத்த நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவரை பள்ளி முதல்வர்கலா ஜேனட், துணை முதல்வர் ரோஸ்லின் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.