நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

dmk

நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நாசரேத்,மே.02:நாசரேத் பேருந்துநிலையம் அருகில்  தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி  நாசரேத் பேருந்து நிலையம் அருகில்  நீர் மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார்.நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், நாசரேத் பேரூர் கழக முன்னாள் செயலாளர் ரவி செல்வகுமார், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரஸ்னா, லெமன் ஜூஸ் மற்றும் பழ வகைகள், நீர், மோர் ஆகியன வற்றை வழங்குவதை துவக்கி வைத்தார்  இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறிஞர் கிருபாகரன்,ஆழ்வார்திருந கரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார்,நாசரேத்பேரூராட்சிமுன்னாள்  தலைவர் மாமல்லன், கவுன்சிலர்கள் பத்ர காளி,ஜெயா,சாமுவேல்,எட்வர்ட்கண்ணப்பா, அதிசயமணி நல்லதுரை, திமுக மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரை, அன்பு தங்கபாண்டியன்,கலையரசு,எஸ்.டி.பி.தாமரை, நகர திமுக அவைத்தலைவர் கருத்தையா, துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பிரதிநிதி மாணிக்கராஜ், தேவதாஸ், ராமச்சந் திரன்,வார்டு செயலாளர்கள் சிலா க்கியமணி,ஜெபகிருபை,உடையார், மாற்கு,மனோகரன்,சேகர்,சரவணன், ஜான்பென்சன், சதா,நகர இளைஞ ரணி பிரதீப், மற்றும் காங்கிரஸ் பிர முகர்கள்சந்திரன்,செல்வின்,மதிமுக பிரமுகர் பாபு செல்வன்,சத்திய மூர்த்தி,அப்பாத்துரை,பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.