தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மருத்துவ முகாம்

thoothukudi voc College

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்தியாவின் 76வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையிலும், வ. உ. சிதம்பரம் கல்லூரி நிறுவனர் செயலர் குலபதி ஏ. பி. சி. வீரபாகு நினைவு நாளின் ஒரு பகுதியாகவும், கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட 70வது அலகு ஆகியவை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமிற்கு 11.8.23 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்தது . 

இந்த ரத்த தான முகாமை கல்லூரி முதல்வர் முனைவர். சொ. வீரபாகு  துவக்கி வைத்தார்கள். ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர்.நிகழ்வுகான ஏற்பாடுகளை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி ரத்த வங்கி பிரிவை சார்ந்த மருத்துவர். ராகேஷ் மற்றும் குழுவினருடன் இணைந்து கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஸ்டீபன் பிச்சைமணி, நாட்டு நலப்பணி திட்ட 70 வது அலகு ஒருங்கிணைப்பாளர் முனைவர். செல்வம் மற்றும் நிலத்தியல் துறை பேராசிரியர் முத்துசாமி ஆகியோர் செய்திருந்தனர்.