தூத்துக்குடியில் திடீர் மழை - வந்த வேகத்தில் நின்றது

thoothukudi

தூத்துக்குடியில் திடீர் மழை - வந்த வேகத்தில் நின்றது

தூத்துக்குடியில் இன்று திடீரென மழை பெய்தது. பெய்த மழை அதே வேகத்தில் நின்றது.  

தமிழகத்தில் பருவ மழை பொய்த்திருந்த நிலையில் தற்போது 14 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தூத்துக்குடி மாநகர் பகுதியில் சற்று முன் மழை பெய்தது. மழை விழுவதை பார்த்து மக்கள் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால் அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. உடனே நின்றுவிட்டது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். வானிலை அறிவிப்பின் படி நாளை ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.