தூத்துக்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் மகனும், பி.ஆர்.ஒ அலுவலக உதவியாளருமான சக்திசிவன் விபத்தில் பலி

Accident

தூத்துக்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் மகனும், பி.ஆர்.ஒ அலுவலக உதவியாளருமான சக்திசிவன் விபத்தில் பலி

தூத்துக்குடி அருகே இராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர்  சண்முகவேல். முன்னாள் தூத்துக்குடி யூனியன் சேர்மன், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராவார். இவரது மகன் சக்திசிவன்(28). இவர் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். 

இந்தநிலையில் கடந்த 18ம் தேதி மதிய உணவு இடைவேளையின் போது தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். மறவன்மடம் சந்திப்பு அருகே பைக் சென்றபோது மாடு ஒன்று ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. எதிர்பாராதவிதமாக அதில் சக்திசிவனின் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சக்தி சிவனின் தலையில் பலத்த அடி விழுந்தது. மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சக்திசிவன், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சக்திசிவனுக்கு பெருமாளீஸ்வரி என்ற மனைவியும் 6 மாத குழந்தையும் உள்ளனர். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது.