நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியமும், புது வாழ்வு சங்கம் இணைந்து விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு!

Nalumavadi

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியமும், புது வாழ்வு சங்கம் இணைந்து விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு!

நாசரேத்,ஜன.06:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியமும், புது வாழ்வு சங்கமும் இணைந்து விவசாயிகளுக்கு மானியத்தில் உழவு செய்து கொடுக்கப்பட்டது.

மானிய விலையில் உழவு திட்டம் என்ற அடிப்படையில் மானிய விலையில் மணிக்கு ரூ. 1,000 பணம் செலுத்தியவர்களுக்கு உழவு செய்து கொடுக்கப்பட்டது. இயற்கை பெருமழையில் கடம்பாகுளம் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சகோ. மோகன் சி லாசரஸ்  மானிய விலையில் உழவு திட்டத்துக்கு பணம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் அவர்கள் கையில் பணம் செலுத்த வழிவகை செய்து நாலுமாவடிக்கு வரவழைக்கப்பட்டு பணம் செலுத்திய விவசாய கையில் பணம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணத்தி, குருகாட்டூர், கல்லாம்பாறை, புறையூர், இராஜபதி, அங்க மங்கலம், மைக்கநாடார்குடி யிருப்பு கிராம மக்கள் பயன் பெற்றனர்.