சென்னை,பொள்ளாச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடியில் குவிந்த நிவாரண பொருட்கள்

Nivaaranam

சென்னை,பொள்ளாச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடியில் குவிந்த நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது, இந்த மழை தூத்துக்குடி மட்டுல்லாது திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுவதும் பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. 

நீர்கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டம் மிக சேதத்தை சந்தித்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் என அரசு நிர்வாகங்கள் சுழன்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசு மற்றும் தனியார் சேவை மனற்பான்மையோடு வழங்கி வருகின்றனர். சென்னை, கோவை,பொள்ளாச்சி என பல்வேறு பகுதியில் இருந்தும் நிவாரணங்கள் வந்து குவிந்துள்ளன.

 

அந்த வகையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்எஸ்எச் மெட்டல் உரிமையாளர் காஸ்டிங் பாபு தலைமையில் இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், 10 டன் அரிசி மற்றும் ஆயிரம் போர்வை மற்றும் பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களுடன் சமூக ஆர்வலர் காஸ்டிங் பாபு தலைமையில் அவரது குழுவினர் தூத்துக்குடி சென்றனர். பின்னர் அங்கிருந்து வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்களை பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாரிடம் வழங்கினர். பின்னர் கோயில்பிள்ளைவிளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில், சென்னையை சேர்ந்த புலியூர் கணேசன், சாந்தகுமார், அருண், இங்க் மணி, கபாலி, திராவிட பக்தன், செல்வா, சுகுமாறன், பாபு பாய், சுந்தர்ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

இதேபோல் பொள்ளாச்சி நல்ல சமாரியன் சங்கத்தின் சார்பில் ஜெய சாமுவேல்ராஜ், ஜெபா மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொள்ளாச்சி நண்பர்கள் ரஞ்சித்குமார், ரத்னபிரசாத்  மற்றும் அசோசியேசன் ஆப் கோகோ பீப்புள்ஸ் இணைந்து தூத்துக்குடி சம்படி காலனி கிராம மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதேபோல் மனிதாபிமானத்தோடு பல்வேறு தரப்பினரும், நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.