மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

nazareth

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

நாசரேத்,மார்ச். 03:மூக்குப் பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  12 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5வயதுக்குட்பட்ட குழந்தைக ளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்  மூக்குப்பீறி,பிரகாசபுரம்,ஒய் யான்குடி, கச்சனாவிளை, புறையூர், நெய்விளை, இடையன்விளை, நாலுமா வடி,சுந்தர்ராஜபுரம்,திருமல ர்புரம், பணிக்கநாடார்குடியிருப்பு , வெள்ளரிக்காயூரணி ஆகிய 12 இடங்களில் நடந்தது. மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ  அலுவலர் டாக்டர் சோனியா தலைமை வகித்தார்.

வட்டார சுகாதார மேற் பார்வையாளர் (பொறுப்பு )  பால் ஆபிரகாம்,மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி தாளாளர் செல்வின்  ஆகியோர் முகாமை துவக் கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர் ஜான் முன்னி லை வகித்தார்.இதில் 948 கு ழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.