தூத்துக்குடியில் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை

Thoothukudi ADMK

தூத்துக்குடியில் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36 வது ஆண்டு நினைவு தினம் இன்று (24.12.2023) அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி அதிமுகவினர் எம்.ஜி.ஆர் உருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

இந்நிகழ்வின் போது, அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், பகுதிச் செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், டேக் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ருமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், எம்பெருமாள், வக்கீல் சரவணபெருமாள், நிர்வாகிகள் மனுவேல் ராஜ், ஜான்சன் தேவராஜ், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், சுரேஷ் பெர்னாண்டோ, எஸ்.கே மாரியப்பன், மிக்கேல், ஹார்பர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனப்பட்டு, செல்லப்பா, மெஜூலா, டேவிட் ஏசுவடியான், மற்றும் ஏகே மைதீன், ரெங்கன், கேகேபி. விஜயன், சேவியர்ராஜ், மாடசாமி, டைமன்ராஜ், ஜெயக்குமார், மணி கணேஷ், சண்முகவேல், செல்வராஜ், பழம் அமலதாசன், மகளிர்கள் இந்திரா, ராஜேஸ்வரி, முத்துலட்சுமி, அன்னபாக்கியம், சரோஜா, பானுமதி மற்றும் சாம்ராஜ், சரவணவேல், பரிபூரண ராஜா, உதயகுமார், யுவன் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.