புதுக்கோட்டை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு - தொடரும் சம்பவங்களால் மக்கள் பீதி

Theft

புதுக்கோட்டை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு - தொடரும் சம்பவங்களால் மக்கள் பீதி

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அருகே போடம்மாள்புரம் ஊரை சேர்ந்தவர் பாலசுந்தரி(65). இவர் இன்று மாலை, குலையன்கரிசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வீட்டுத்தீர்வை மற்றும் தண்ணித்தீர்வை செலுத்துவற்காக கிளம்பினார். போடம்மாள்புரத்தில் இருந்து குலையன்கரிசல் நோக்கி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்மநபர், திடீரென பாலசுந்தரி கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க ஜெயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி ஒடிவிட்டாராம். இது குறித்து பாலசுந்தரி, புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஆசாமியை தேடிவருகின்றனர். 

மேலும் இதே மர்மநபர் நேற்று குளக்கரை வழியாக கூட்டாம்புளியில் இருந்து திருமலையாபுரம் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கிறார். அது கவரிங் நகை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யபட்டுள்ள நிலையில் மறுநாளே இப்படியொரு ஜெயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.