தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் - எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார்

A.D.M.K

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் - எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் 3 இடங்களில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழம் மற்றும் குடை ஆகியவற்றை வழங்கினார்.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைத்திட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி மே 8ஆம் தேதி இன்று தூத்துக்குடியில் இராஜாஜி பூங்கா வாட்டர் டேங்க் முன்பு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி ஏற்பாட்டிலும், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு அருகில் வடக்கு பகுதி அதிமுக சார்பில் பகுதி துணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் செண்பகசெல்வன் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல்க் அருகில் தெற்கு பகுதி அதிமுக சார்பில் பகுதி அம்மா பேரவை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், ரோஸ்மில்க், நன்னாரி சர்பத், தர்பூசணி, வாழை, மா, ஆரஞ்சு, போன்ற பழ வகைகளும் மற்றும் வெயிலில் தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு குடை போன்றவைகளையும் வழங்கினார். 

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில இணைச்செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கனேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சரவணபெருமாள், முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், நவ்சாத், துணைச் செயலாளர் மிக்கேல், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஜோஸ்வா அன்பு பாலன், தெர்மல் ஜேசுராஜ், ஐ.டி விங் சங்கர்நாராயணன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், சுரேஷ் பர்ணான்டோ, சனிக்குலாஸ், நாகூர் பிச்சை, இம்ரான், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், ராஜேஸ்வரி, இந்திரா, அன்னத்தாய், முத்துலெட்சுமி, ஸ்மைலா, ஜெயசுதா, வட்டக் கழக செயலாளர்கள் பாக்கியராஜ்,  சொக்கலிங்கம், மணிகண்டன், மணிவண்ணன், ஜெரால்டு, சுப்பிரமணி, செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, மாரிமுத்து, யோவன், ஹார்பர் பாண்டி, போல்டன் புரம் அருண் ராஜா, உலகனாதபெருமாள்,  கொம்பையா, பொன் சிங்,  சண்முகவேல், முத்துக்குமார், மற்றும் ஸ்ரீராம் செல்வசேகர், ஏசுதாஸ், பெத்துராஜ்குமார், மாரிமுத்து, பாலஜெயம், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.