புதுக்கோட்டை அருகே 2 கன்று குட்டிகளை திருடிய புகாரில் 2 பேர் கைது

Theft

புதுக்கோட்டை அருகே 2 கன்று குட்டிகளை திருடிய புகாரில் 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சிறுபாடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அசார் (29). இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் தொழுவத்தில் கட்டி இருந்த 2 கன்று குட்டிகள், 80 வைக்கோல் கட்டுகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அசார் புகார் செய்தார்.

அதனடிப்படையில் சப் - இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  அப்போது கூட்டாம்புளி, சாமி கோவில் தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் சுரேஷ் என்ற பன்றி சுரேஷ் (48), முருகேசன் மகன் ரஞ்சித்குமார் என்ற சீனிவாசன் (25) ஆகிய 2பேர் சேர்ந்து திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து, சுரேஷுக்கு சொந்தமான பிக்கப் வேன் மற்றும் 40 வைக்கோல் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.