தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிட வேண்டும் - மாநகர காங்கிரஸ் தீர்மானம்

M.P

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிட வேண்டும் - மாநகர காங்கிரஸ் தீர்மானம்

தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவரில் நடைபெற்றது. அதற்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் காமராஜ், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம், முன்னாள் எம்எல்.ஏ சுடலையாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் கனிமொழி கருணாநிதி போட்டியிட வேண்டும். கனிமொழியை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸார் அயராது உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ் மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி ஐசன்சில்வா, ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  சகாயராஜ், முத்து விஜயா, அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்ணபாஸ், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பிரீத்தி, சாந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், சேவாதளம் மாவட்ட தலைவர் ராஜா, 

மாவட்டத் துணைத் தலைவர்கள் விஜயராஜ், மைக்கில் பிரபாகர், சின்ன காளை, ரஞ்சிதம் ஜெபராஜ், சீனிவாச ஆசாரி மாவட்டச் செயலாளர்கள் கோபால், கதிர்வேல், நாராயணசாமி, குமாரமுருகேசன் சேவியர் மிசியர், மாவட்ட பொதுச் செயலாளர் மிக்கேல், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ், முத்துராஜ், முத்துவேல், சுப்பிரமணியன், பேட்ரிக், வெள்ளையன், ஜான்சன், ஜோ பர்ணாந்து, ஜெய கிங்ஸ்டன், ஜேம்ஸ், அந்தோணிசாமி, முத்துப்பாண்டி, முனியசாமி, கிருஷ்ணன், மகாராஜன், கவுன்சிலர் எடிண்டா, 

முன்னாள் கவுன்சிலர்கள் வெங்கடசுப்பிரமணியன், கந்தசாமி, ஆரோக்கியம், தாமஸ், ரூபன் வேத சிங், எட்வர்ட், பெத்து ராஜ், பாலகிருஷ்ணன், ரெனிஷ் பாபு, சரஸ்வதி நாதன், கனகராஜ், ராஜா, முனியசாமி, சித்திரை பால்ராஜ், அழகுவேல், மகேந்திரன், கருப்பசாமி, புவனேஷ்குமார், தளவாய் பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.