தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

N.P.Jegan

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்கிற திட்டத்தை கடந்த 19ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் மூலம் மக்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளால் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட முகாம் 1,2,3 வார்டு பகுதிகளுக்கு போல்பேட்டை தங்கம்மாள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. அதனை பார்வையிட வந்த மேயர் ஜெகன் பெரியசாமி, இத்திட்டத்தில் பெருமளவில்  கலந்து கொண்ட மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் கோரிக்கைகள் மீது  உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இதைவிட விரைந்து நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தார். 

மேயருடன் உதவி ஆணையர் தனசிங், உதவி செயற்பொறியாளா பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, சுப்புலட்சுமி, பகுதி செயலாளர்  சிவக்குமார், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.