புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே ரோடு மார்க்கர் பெயிண்ட்.! - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு

High way

புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே ரோடு மார்க்கர் பெயிண்ட்.!  - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு

கோவில்பட்டி - முக்காணி இடையிலான மாநில நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்குமுன்னர் புதுக்கோட்டை - கூட்டாம்புளி இடையே நடைபெற்ற பணியின் போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சில வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அவற்றின் மீதும் சாலையின் மீதும் வெள்ளை கலரில் ரோடு மார்க்கர் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்படி இரண்டு நாட்களில் அப்பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அதற்காக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.