வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு, விளையாட்டு வாரப்போட்டி

nazareth

வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு, விளையாட்டு வாரப்போட்டி

திருச்செந்தூர்,மார்ச்.11- வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் போட்டிகள் நடந்தது.

திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கலை மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகள் நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆறுமுகநேரி 12வது வார்டு கவுன்சிலர் ஜெயராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்  பாலஜெயந்தி, கல்வியாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வக்கனி, பெற்றோர் உறுப்பினர் தினகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஜெபராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.