4 மாதத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் - எல் அண்ட் டி நிறுவனத்தை பாராட்டிய அமைச்சர் கீதாஜீவன்

Minister news

4 மாதத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் - எல் அண்ட் டி நிறுவனத்தை பாராட்டிய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் ரூ.47 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய அங்கான்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையொட்டி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி, சுந்தரவேல்புரம் ஆகிய இரு இடங்களில் எல்.அண்ட் டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.47 லட்சம் மதிப்பில் 2 அங்கன் வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.  மாவட்ட திட்ட அலுவலர் பொறுப்பு காயத்ரி வரவேற்றார். 

இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய அங்கன் வாடி மையங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருடைய நலனிலும் அக்கறைகொண்டு செயல்படுகிறாா். எல் அண்டி நிறுவனம் பல தொண்டு காரியங்களை செய்து வருகிறது. அதனடிப்படையில் அங்கன்வாடி மையம் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்றுக்கொண்டு இரண்டு அங்கன்வாடி மையங்களை நான்கே மாதத்தில் கட்டுக்கொடுத்துள்ளனா். அங்கன் வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கழிப்பறை தண்ணீர் வசதி என கட்டமைப்புகள் முழுமையாக உருவாக்கி ஊரக பகுதி மட்டுமின்றி நகா்புறங்களிலும் பராமரிக்க வேண்டும். இந்த ஆண்டு 150 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்படும். கர்ப்பினி தாய்மாா்கள் சந்திக்கும் பல இடையூறுகளையும் தவிர்க்கும் பொருட்டு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல பணிகளை மேற்கொள்ளும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்றார். 

விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன், துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் தமிழ்செல்வன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனிர்அகமது, உதவி ஆணையர் சுரேஷ் குமார், கவுன்சிலர்கள் பவானி, நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்சலின், ஜான்சிராணி, எல்.என்.டி நிறுவனத் தின் பிரயாஸ் ட்ரஸ்ட் தலைவர் மீனா சுப்ரமணியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், தங்கம், அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதா, தேவி, துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் கருப்பசாமி, சந்தனமாரி, நாராயண வடிவு, முன்னாள் கவுன்சிலர்கள் அமாலுதீன், சாந்தா, வட்டச் செயலாளர்கள் ரவிசந்திரன், சதீஷ்குமார், முனியசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்,  செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.