தமிழகம் 9.69 சதவீதம் வளர்ச்சி - அமைச்சர் தங்கம்தென்னரசு பெருமிதம்
Minister News

மத்திய அரசின் புள்ளியியல் ஆய்வறிக்கின்படி தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் தற்போது பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் பங்கை அளித்து எட்ட முடியாத வளர்ச்சியை எட்டி உள்ளது என தமிழக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று(5.4.2025)ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் தமிழக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு ஸ்டார்ட் அப் திட்டத்தில் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை வழங்கிய சிறந்த புதிய தொழில் முனைவோர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர், மத்திய அரசின் புள்ளியியல் மட்டும் திட்ட அமுலக்கத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி நிலைத்த விகிதங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது மிக சிறப்பானது. கடந்த பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சி எட்ட முடியாத வளர்ச்சி என குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் கடந்த நான்காண்டுகளில் எடுத்த பல்வேறு முயற்சிகளில் வழியாக இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. அதன்படி 15 புள்ளி 75 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதாரம் 17.23 லட்சம் கோடியாக இந்த ஆண்டு உயர இருக்கிறது. ஒன்பது புள்ளி 6 9 சதவீதம் வளர்ச்சியில் என்பதை பண வீக்கத்தை உருவாக்கி எடுத்துக்கொண்டால் 14% ஆக இருக்கும் பணவீக்கம் இல்லாமல் எடுத்துக் கொண்டால் 9 புள்ளி 69 சதவீதமாக இருக்கும். பொருளாதார நிபுணர்களான ரெங்கராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோர் தங்களது அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது புள்ளி மூன்று சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதையும் கடந்து 9 புள்ளி 6 சதவீதமாக தமிழகம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விவசாயம், உற்பத்தி துறை, சேவை துறை ஆகியவற்றில் இந்த விகிதங்கள் மிகுந்த பங்கை வகித்துள்ளது.
இதே விகிதத்தில் இந்த வளர்ச்சி செல்லும் ஆனால் தமிழக முதலமைச்சர் சொன்னதைப் போல் நாம் 2030 ஆம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை பெறக்கூடிய அளவிற்கு இந்த வளர்ச்சி விகிதம் உள்ளது. தமிழக முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வை அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியால் இது சாத்தியமானது என்றார்.
முன்னதாக பூத்தொழில் களம் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.