தெய்வச்செயல்புரம் கல்லூரி மாணவர் அத்திரிமலையில் தண்ணீரில் மூழ்கி பலி

Accident

தெய்வச்செயல்புரம் கல்லூரி மாணவர் அத்திரிமலையில்  தண்ணீரில் மூழ்கி பலி

துாத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர் திருப்பதி. ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முத்துகுமார், 18. இவர் பாளைங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்று வந்தார். தனியார் பயிற்சி மையத்தின் நிர்வாகி பொறுப்பில் 15 மாணவர்கள் ஆழ்வார்குறிச்சி அருகே கடனா அணை பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் கலந்து கொண்டனர். திரும்பி வரும் வழியில் கல்லாற்றில் நண்பர்களுடன் சேர்ந்து முத்துக்குமார் குளித்தார்.

திடீரென முத்துகுமார் காணாமல் போனார். நண்பர்கள் தேடி பார்த்த போது இவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது தெரிந்தது. புகாரின் படி, கடையம் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார். கோயிலுக்கு வந்துவிட்டு வீடு திரும்பும் வழியில், கல்லாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.