செல்போனில் பாட்டுகேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவன் - ரயில் மோதி பலி

accident

செல்போனில் பாட்டுகேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவன் - ரயில் மோதி பலி

நாசரேத், செப்.6 நாசரேத்தில் ரயில் என்ஜின் மோதி சிறுவன் பலியானார். செல்போனில் பாட்டுகேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்றதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் ராசையா மகன் சரவணன் மாரி(16). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கடந்த ஒருவாரமாக அங்குள்ள கடையில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்றுமுன் தினம்(செப்.5) பகல் மூக்குப்பீறி- நாசரேத் ரயில்வே தண்டவாளத்தில் இயர்போனில் பாட்டு கேட்டபடி நடந்து சென்ற தாக கூறப்படுகிறது. அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த சோதனை ரயில் என்ஜின்(ஓஎம்எஸ்) சரவணன் மாரி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்து நெல்லை ரயில்வே எஸ்.ஐ.ராமகிருஷ்ணன், ரயில்வே தனிப்பிரிவு முத்தமிழ் செல்வன், ஏட்டு அந்தோணி மற்றும் ரயில்வே போலீசார், சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாசரேத்தில் பரிதாபம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் தற்கொலை

நாசரேத், செப்.-7நாசரேத் பெத்தானிநகரை சேர்ந்தவர் காசிராஜன் மகன் முத்துசெல்வன்(24). இவர் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துசெல்வன், வீட்டில் தூக்கில் தற்கொலை செய்தார். தகவல் அறிந்து நாசரேத் போலீசார், முத்துசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபர்  முத்து செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கானகாரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.