நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை! சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் நடந்தது!!

nazareth

நாலுமாவடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை! சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் நடந்தது!!

நாசரேத், மார்ச்01:நாலுமா வடியில் அற்புத விடுதலை பிரார்த்தனை சகோ.மோக ன் சி.லாசரஸ் தலைமையி ல் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர்அருகிலுள்ள நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியங்களின் சார் பில் குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த் தனைக் கூட்டம் வியாழக் கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். நாலுமா வடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர்  சகோ. மோகன் சி. லாசரஸ் சிறப்பு செய்தி கொடுத்து வியாதியஸ்தர்களுக்காக எனண்ணைய் பூசி சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார். 

பிரார்த்தனைக் கூட்டத் தில் திருநெல்வேலி, தூத் துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளாக மக்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியப் பொது மேலா ளர் செல்வக்குமார் தலை மையில் உடன் ஊழியர்கள் செய்திருந்தனர்.