நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

nazareth

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

நாசரேத், மார்ச்.03:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி சிற்றாலயத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சுதா கர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் கென் னடி வேதராஜ்  முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா ஆரம்ப ஜெபம் செய்தார்.  பணியில் இருந்து ஓய்வு பெறும் முதுகலை விலங் கியல் ஆசிரியர் ஸ்டான்லி இம்மானுவேல்,  அறிவியல் ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் ஜெய சீலன் சேகர் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர்கள் வாழ்த்து பாடல் களை பாடினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெப ராஜ், அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓய்வுபெறும் ஆசிரியர் களுக்கு மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களின் சார்பில்  தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. வாழ்த்து மடலுடன் கூடிய நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது. அதன் பின்னர், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மூவ ரும் தனித்தனியாக ஏற்புரை வழங்கினர். தமிழ் ஆசிரியை ஜெபகனி நன்றி கூறினார்.