திருமறையூர் மறுரூப ஆலயத்தில் திடப்படுத்துதல் ஆராதனை

nazareth

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் திடப்படுத்துதல் ஆராதனை

நாசரேத்,ஜன.23: நாசரேத் திருமறையூர் மறுரூப ஆல யத்தில் திடப்படுத்துதல் ஆராதனை நடந்தது.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டலம் திருமறையூர் சேகரம் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் முதல் திடப்படுத்துதல் ஆராதனை நடந்தது. ஓய்வு பெற்ற மதுரை- இராமநாதபுரம் திருமண்டல பேராயர்  ஜோசப் தலைமை வகித்து திடப்படுத்துதல் ஆராத னையை  நடத்தி தேவ செய்தி கொடுத்தார். ஆராதனையில் 30  பேர்  திடப்படுத்துதல் பெற்றனர். 

இந்நிகழ்வில் பேராயரின் சாப்பிளினும், அகப்பைகுளம் சேகர தலைவருமான  பாஸ்கரன், பிரகாசபுரம் சேகர தலைவர் ஆண்ட்ரூ நவராஜ், ராஜாவின் கோயில் சேகர  தலைவர்  மோசஸ், ஓய்வு பெற்ற குருவானவர்கள் பொன்னுசாமி, செல்வராஜ்,  சபை ஊழியர் ஸ்டான்லி  மற்றும் சபை மக்கள் திரளானோர் பங்கேற்ற னர்.இதையடுத்து நிறை வில் பேராயர், அவரது துணைவியார்  மற்றும் குருவானவர்களுக்கு சபை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி யினை திருமண்டல பெரு மன்ற உறுப்பினர் தேவ தாஸ் தொகுத்து வழங்கி னார்.திருமறையூர் பெண் கள் ஐக்கிய சங்க தலைவி கோல்டா சாமுவேல்,  திரு மண்டல பெருமன்ற உறுப் பினர் ஜெயபால், தேவதாஸ் சேகர செயலாளர் ஜாண் சேகர் மற்றும் கமிட்டி அங் கத்தினர்கள் பெஞ்சமின், ஆசீர் துரைராஜ்,  கடைய னோடை பாக்கியநாதன், பிரவீன்குமார்,ஜீவன், பாட கர்குழுதலைவர் ஜோயல், ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் திரளா னோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை  திருமறையூர் சேகர தலைவர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.