கனிமொழி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள்

D.M.K.NEWS

கனிமொழி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளிட்டார். அதில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எம்.பியான கனிமொழிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வந்த கனிமொழிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. அதற்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகயைா, ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஓன்றிய செயலாளர்கள் ஜெய்கொடி, சுப்பிரமணி, சரவணக்குமார், இளையராஜா, ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், தயாநிதிபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜ், கணேசன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், ஓழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளரும் திருச்செந்தூர் நகர்மன்றஉறுப்பினருமான செந்தில்குமார், அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணைத்தலைவர் சந்திரசேகர், நகர துணைச்செயலாளர் மகாராஜன், உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி 3ம் மைல் எப்சிஐ குடோன் அருகில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகயைா, ஊர்வசி அமிர்தராஜ், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

அப்போது கனிமொழி, நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் 2வது முறையாக உங்களுக்கு பணியாற்றுவதற்கு ஓய்வின்றி உழைத்த கலைஞர் வழியில் ஓய்வின்றி உழைத்து வரும் தலைவரும்,  முதலமைச்சருமான தளபதியார் என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். உங்களுடைய அன்பையும் பாசத்தையும் பெற்றிருக்கும் நான் தொடர்ந்து தேர்தல் களத்தில் அதே பாசத்தையும் அன்பையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். கூட்டணி கட்சியினரும் எனக்கு அளித்த உற்சாகம் மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். 

தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக அலுவலம் முன்பு உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த கனிமொழி, 3ம் மைல் தேவர் சிலை, அம்பேத்கார், குரூஸ்பா்னாந்து, காந்தி, காமராஜர், அண்ணா, வஉசி, இந்திராகாந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். 

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நெசவாளர் அணி மாநில துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூாரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் ஐயாத்துரைபாண்டியன், தங்கமாரியம்மாள், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ்,  துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குபேர் இளம்பரிதி, சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், முருகஇசக்கி, ஜெயக்கனி, பரமசிவம், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், சீதாராமன், முத்துராமன், வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், ஏசுவடியான்,  கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, சுபேந்திரன், ஆனந்த கபேரியேல்ராஜ், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, பார்வர்ட் பிளாக் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் உள்பட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.