பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் - ஓ.பி.எஸ் மீண்டும் கருத்து

O.P.S

பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் - ஓ.பி.எஸ் மீண்டும் கருத்து

அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்ட நிலையிலும், தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார் அதிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம். மீண்டும் அதிமுகவில் அங்கம் வகிப்போம் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் அவர் ஆணித்தனமாக கூறிவருகிறார். இந்தநிலையில் இன்று அவர் மதுரையில் செய்தியாளர்கள் கேட்விக்கு பதில் அளிக்கும் போது, பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று தன்னையும், சசிகலா,டிடிவி உள்ளிட்டோரையும் மனதில் வைத்து தெரிவித்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை முழுமையாக ஆதரிப்போம் என்றும், கடந்த 10 ஆண்டுகாலம் பாஜக நல்லாட்சி நடத்தியிருக்கிறது என்றும் தெரிவித்தார். 

அதிமுகவில் தொடர்வது, பாஜகவை ஆதரிப்பது மற்றும் பாஜக வெற்றி பெறுவதின் சாத்தியகூறுகள் குறித்து கேட்டபோது கொஞ்ச நாட்கள் காத்திருங்கள் என்றார். இதன் மூலம் வரும் தேர்தல் நேரத்தில் பல அரசியல் மாற்றங்கள் நடைபெறும் என்பதை பார்க்க முடிகிறது.