நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்!

Nalumavadi

நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்!

நாசரேத்,பிப்.19:நாலுமாவ டி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் நாலு மாவடி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் 300-க் கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர்அருகிலுள்ள நாலு மாவடி புது வாழ்வு பன்னோ க்கு மிஷன் மருத்துவமனை சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் சிற ந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிறப்பு  மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவ மனையில்  24 மணி நேர மகளிர் மற்றும் மகப்பேறு நோய் சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிறப்பு சிகிச் சைபிரிவு,நரம்பியல் சிகிச் சைபிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு, பல் மருத் துவ பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, உடலியக்க மருத்துவ பிரிவு, ஐ.சி.யூ. வசதி உள்ள ஆம்புலன்ஸ் வசதி, 24 மணி நேர மருந்தகம் வழங்கும் பிரிவு,  அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல் பட்டு வருகிறது.

எக்கோ கார்டியோகிராம், இசிஜி, எக்ஸ்ரே, அனைத்து வசதிகள் கூடிய ஆய்வகம், ஸ்கேன் வசதி, அனைத்து வசதிகள் கூடிய பிரசவ அறை, அவசர சிகிச்சை பிரிவு,அவசரப் பிரிவு, ஏ.சி. மற்றும் நான்ஏ.சி.அறைகள், ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான தனி பொது வார் டுகள்,24மணிநேரஉறைவிட மருத்துவர்கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவு, சிற ப்பாக பயிற்சி பெற்ற செவி லியர்கள், கேண்டீன் வசதி கள் ஆகியவை குறைந்த கட்டணத்தில் சிறப்பு மருத் துவர்களைக் கொண்டு இம் மருத்துவமனை செயல்பட் டுவருகிறது.

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத் துவமனையில் குழந்தைக ள் மற்றும் பெரியவர்களுக் கான இலவச சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது. முகாமினை சகோ. மோகன் சி.லாசரஸ் ஜெபித்து துவக் கி வைத்தார். மருத்துவம னையின் மருத்துவ இயக்கு னர் டாக்டர்அன்புராஜன் வர வேற்று பேசினார்.புதுவாழ் வுபன்னோக்கு மிஷின் மரு த்துவமனை மெடிக்கல் சூப் பிரண்டு டாக்டர் விமல் ஜோ சப், இருதய நோய் மருத்து வர் சந்திரகுமார், குழந்தை கள்நல மருத்துவர் டேனி யல்ராஜ், பொது மருத்துவர் ஷெரின் ஜானகி, மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா  ஆகி யோர் கொண்ட மருத்துவக் குழுவினர் இலவசமாக மரு த்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சைகள் அளி த்து இலவச மருந்துகளை வழங்கினர். மேலும் டாக்டர் பிரேம்குமார் தலைமையில்  அகர்வால் கண் மருத்துவ மனைகுழுவினர் இலவசமாக கண்சிகிச்சைஅளித்தனர்.

இலவச மருத்துவ முகாமிற் கான ஏற்பாடுகளை நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியப்பொது மேலா ளர் செல்வக்குமார் தலை மையில் கிளமெண்ட் எப னேசர்பால் இயேசு விடு விக்கிறார்  ஊழிய அறங்கா வலர்கள் டேவிட் பாஸ்கரன், மருதநாயகம் மற்றும் மருத் துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அலு வலர்கள் செய்திருந்தனர்.

முகாமில் நாலுமாவடியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.