எந்த கட்சி ஆட்சியிலும் செய்தியாளர்களே எதிர்கட்சியினர்.! - டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேச்சு!

Nazareth news

எந்த கட்சி ஆட்சியிலும் செய்தியாளர்களே எதிர்கட்சியினர்.! - டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேச்சு!

நாசரேத்,மார்ச்.18:

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் எதிர்க் கட்சியாக செயல்படுவது செய்தியாளர்கள்தான் என்று நாசரேத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசினார். 

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட கிளையின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ.ஹாலில்  நடை பெற்றது.விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர்  குவெங்கட்ராமன், தூத்துக் குடி புறநகர் மாவட்ட தலை வர்  இருதயஞான ரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், துணைத் தலைவர் அருள் குமார்,மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீவை ஞான துரை ஆகியோர்  முன் னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் நாசரேத் நிக்சன் வரவேற்று பேசினார்.மாவட்ட கவுரவ தலை வர் விஜயராஜா, தேசியக் குழு உறுப்பினர் எழுவை என்.அலெக்ஸ் புரூட்டோ, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி ஆர். முரு கன், கோவில்பட்டி மாநகர் மாவட்ட தலைவர் மகேஸ்வ ரன்,வழக்கறிஞர் எம். என். அகமது சாகிபு, சமூக சேவ கர் ஏரல் ஜெயபால், தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் தர்மபுரி ஸ்ரீநி வாசன், மூத்த செய்தியா ளர்கள் சாத்தை மகாராஜன், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி. ஆர்.மன்ற இணைச் செய லாளர் ஞானையா, நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி,தூத்துக்குடிமாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச் செய லாளர் கிருஷ்ணராஜ், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் பொறியாளர் வே. ரஞ்சன்,காமராஜர் ஆதித்த னார் கழக மாவட்ட செயலா ளர் ஐஜினஸ் குமார்,  திருச் செந்தூர் கிருஷ்ணன், ஹரி ஹரன் (எ) அய்யப்பன், சதா னந்தம்,மைக்கேல், நாராய ணன், வாசுதேவன், சங்கர நாராயணன்,கிருஷ்ணன்,முருகன் உள்ளிட்டோர் வாழ் த்துரை வழங்கினர். முன்ன தாக விழா தமிழ்நாடு பத்தி ரிகையாளர்சங்ககொடியை  நாசரேத் நகர முன்னாள் திமுக செயலாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் பேரூராட்சி துணைத் தலை வர் அருண் சாமுவேல் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி செல் வகுமார்  ஏற்றி வைத்தார்.

விழாவில் விழாவிற்கு தலைமை வகித்து மாநில தலைவர்டி.எஸ்.ஆர்.சுபாஷ்  பேசுகையில், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.பத்திரிகையாளர் கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறை யான அரசு அங்கீகார அடை யாள அட்டை பெற்று சிறப் பாகவும், நேர்மையாகவும், அரசு பணி செய்யும் அலு வலர்களுடன் இணைந்து  பணியாற்ற வேண்டும்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தா லும் உண்மையான எதிர்க் கட்சியாக செயல்படுவது பத்திரிகையாளர்கள்தான். அரசின் மெத்தன போக்கை யும் பொதுமக்கள் ஆதங்கத் தையும் தெளிவாகதெரிவிப் பவர்கள் பத்திரிகையாளர் கள்தான்.எனவே நீங்கள் உண்மையாகவும், நேர்மை யாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும். முக்கி யமாக ஒற்றுமையாக தோ ளோடு தோள் கொடுத்து செயல்பட வேண்டும். உங்க ளுக்கு பாதிப்பு என்றால் தமிழ்நாடுபத்திரிகையாளர் கள்சங்கம்குரல்கொடுக்கும், உறுதுணையாக நிற்கும். உறுப்பினர்களுக்கு தேவை யான திட்டங்களை அரசிடம் இருந்து பெற்றுத்தர பாடு படும்.இவ்வாறு பேசினார்.

விழாவில் தமிழ்நாடுமகளிர் தொழில் முனைவோர் நல சங்க நிறுவனர் முனைவர் கிருஷ்ணா ராதாகிருஷ் ணன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழா நிகழ்ச்சிகளை தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்க மண்டல ஒருங்கிணை ப்பாளர் ஆ.க.வேணுகோபா ல் தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்நாடு பத்திரி கையாளர் சங்க புறநகர் மாவட்ட  மக்கள் தொடர்பு அலுவலர் காளிதாஸ் நன்றி கூறினார். விழாவில் தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்க கோவில்பட்டி மாநகர் மாவட்ட செயலாளர் தங்க ராஜ், பொருளாளர் சுதன், செய்துங்கநல்லூர் சுதாகர், ஸ்ரீவை தினகரன், குமார வேல், பார்த்தீப சங்கர், வி.எம்.சத்திரம் நாகராஜன், நாசரேத் ஜோயல், ஜெயஷீ பா,திருமறையூர் ஆபிரகாம், சாத்தை கவிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.