தூத்துக்குடி வேட்பாளராக கனிமொழி - நாசரேத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
D.M.K
நாசரேத்,மார்ச்.21:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாள ராக கனிமொழி அறிவிக் கப்பட்டதை யொட்டி நாசரேத்தில் திமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், மாவட்ட திமுக பிரதிநிதிகள் சுடலைமுத்து, கலையரசு,தாமரைசெல்வன், முருகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசிங், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி காந்தி, வார்டுசெயலாளர்கள் உடை யார், ஜெரின், அகஸ்டின், ஞானராஜ்,பால்ராஜ்,இம்மான், துரைராஜ், ஸ்டீபன், சுந் தர்சிங், காங்கிரஸ் சார்பில் நகர காங்கிரஸ் தலைவர் செல்வகுமார், செல்வின், பிரேம்குமார், விஜயகுமார் மற்றும் மோட்டார் சங்க நிர்வாகிகள் கென்னடி, சாமுவேல், ஜெயசிங்,விஜி , எடிசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.