தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

Congress

தூத்துக்குடியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு குறித்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நாளை (சனிக்கிழமை)காலை தூத்துக்குடி மாணிக்க மாஹாலில் நடைபெறுகிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த முகவர்கள் கூட்டம் தொடர்பாகவும், அதில் கலந்து கொள்வது குறித்தும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட, வட்டார,நகர,மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் முன்னிலை வகித்தார். இதில் மேலிட பொறுப்பாளராக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் நாளை நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு குறித்து விரிவாக பேசினர்.  

இதில் தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் சற்குரு, ஆழ்வார் திருநகரி வட்டாரத் தலைவர் கோதாண்ட ராமன், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன்,சாத்தான்குளம் வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி பிரபு, முத்துவேல் ,தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர் , மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல் ஞானதுரை, சகாயராஜ் ,தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சேகர், ராஜன் ,மாவட்டத் துணைத் தலைவர்கள் பிரபாகரன் , சின்னகாளை, கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.