ராமர் ஆலயத்தின் பிராணப்பிரதிஷ்ட்டை அயோத்தியில் : Dr. K. சுதா

Ramar

ராமர் ஆலயத்தின் பிராணப்பிரதிஷ்ட்டை அயோத்தியில் : Dr. K. சுதா

பகவான் ஸ்ரீ ராமரின் புனிதமான பிறந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கல்வியாளர் டாக்டர் கே.சுதா தெரிவிக்கிறார். இது குறித்து சுதாவின் கட்டுரை :  இந்துக்களைப் பொறுத்தவரை, 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டம். அதற்கு பெரும் தீர்வாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு அவதாரம் எடுத்து ராமர் பிறந்த இடமான அயோத்திய ராமர் கோயில் அமைக்க முழு முனைப்புடன் ஈடுபட்டு செயலாற்றி வெற்றியும் காணப் போகிறார்.

ஆம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி22, 2024 இல் திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து கோயில் கதவுகள் பக்தர்கள் ஆகிய நமக்காக திறக்கப்படும். இந்திய நீதித்துறையின் தூசி நிறைந்த, அரைக்கும், காலனித்துவ தாழ்வாரங்களில் 500 ஆண்டுகள் தீராத பிரச்சனையாக இருந்த  பிரச்சனைக்கு, 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கோயில் கட்டுமானம் தொடங்கியது ஒரு முழு தீர்வாக அமைந்தது .

பகவான் ஸ்ரீ ராமரின் புனிதமான பிறந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில், இசுலாமிய படையெடுப்பாளர் பாபரால் இந்த கோவில் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2019, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட நிறுவப்பட்ட அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவிடம் கோயிலின் கட்டுமானம் ஒப்படைக்கப்பட்டது.இந்துக்களைப் பொறுத்தவரை, 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டம், இந்து சமூகத்திற்கு வரலாற்று மற்றும் கலாச்சார அநீதிகளை சரிசெய்வதற்கு அப்பாற்பட்டது.

ராமர் கோவிலின் கட்டுமானமானது,  நாகரிகத்திற்குள் ஒரு ஆழமான ஒற்றுமை மற்றும் அடையாளத்தை அடையாளப்படுத்துகிறது. ஒரு பகிரப்பட்ட கலாச்சார மற்றும் மத கட்டமைப்பின் கீழ் பல்வேறு பின்னணியில் இருந்து இந்துக்களை ஒன்றிணைக்கிறது. சீன யாத்ரீகரான யுவான் சுவாங், ராமஜென்மபூமியின் பிரமாண்டத்தை சுட்டிக்காட்டி, நகரத்தின் பத்து தேவாலயங்களைக் கண்டு வியந்தார். பல நூற்றாண்டுகளாக, யஷோவர்மன் மற்றும் அனயச்சந்திரா போன்ற ஆட்சியாளர்கள் அயோத்தியின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை வளப்படுத்தினர், அவுரங்கசீப்பின் கட்டளையின் பேரில் ஃபெடாய் கானால் இடிக்கப்பட்ட மதிப்பிற்குரிய விஷ்ணு-ஹரி கோயில் உட்பட, அற்புதமான கோயில்களால் நகரத்தை அலங்கரித்தனர்.

அயோத்தியின் அமைதியான இருப்பு 1192-93 இல் மகதும் ஷா ஜுரான் கோரி போன்ற படையெடுப்பாளர்களால் மீண்டும் சீர்குலைக்கப்பட்டது.பல தசாப்த கால காத்திருப்பு மற்றும் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் தயாராகி, ஜனவரி 22, 2024 அன்று பக்தர்களுக்காக  பிரம்மாண்டமான திறப்புவிழா நடைபெறும். 

பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற முக்கிய பிரமுகர்களைத் தவிர, ராமர் கோவிலில் நடைபெறும் பிரம்மாண்டமான பிரான் பிரதிஷ்டை விழாவில் 6000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.ராம் லல்லா' பிரமாண்டமான கும்பாபிஷேக விழாவிற்கான 6,000 அழைப்பிதழ்கள் நாடு முழுவதும் உள்ள அழைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோயில் கட்டுவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, பிற நாடுகளிலிருந்தும் பங்களிப்பு கிடைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தாய்லாந்து ராமஜென்மபூமிக்கு மண்ணை அனுப்பியுள்ளது. முன்னதாக, தாய்லாந்தில் உள்ள இரண்டு நதிகளில் இருந்து, ராமர் கோயிலுக்கு தண்ணீரை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, மாநிலத்தில் ஒரு திருவிழா போல் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் ஜனவரி 14 முதல் கும்பாபிஷேகம் வரை மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட உத்தரபிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சார கவுன்சில் மூலம் உள்ளூர் கலைஞர்களால் நிர்வகிக்கப்படும்.

மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளூர் கலைஞர்கள் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி முதல் ஜனவரி 22, 2024 அன்று ராம்லாலாவின் பிரதிஷ்டை வரை ராம் சரித்மனாஸ் மற்றும் ஹனுமான் சாலிசாவை தொடர்ந்து ஓதுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு பூஜை செய்யப்பட்ட அட்சதை, ராமர் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு பாஜக நேரில் வழங்க இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், சமுதாய அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், ராம பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர், ஜனவரி 1 முதல் 15- ம் தேதி வரை இந்தப் பணிகளில் ஈடுபடுவர். பல நுாற்றாண்டுகள் நடந்த போராட்டத்திற்கு பின் சுமூகமான முடிவு எட்டப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவு நனவாகியுள்ளது. இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்து குழந்தை ராமரை தரிசிக்க அழைப்பு விடுக்கவே வீடு வீடாகச் செல்ல இருக்கிறோம். அதில் ஹிந்துவாக தங்கள் அனைவரின் பங்கீடு மிக முக்கியம். பல தசாப்த காலப்போராட்டத்திற்கு பின் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பதில் ஒவ்வொரு இந்துவாக நாம் பெருமை கொள்வோம். இதை ஒரு வெற்றி விழாவாக கொண்டாடுவோம்.

அயோத்தியில் 2024 ஜனவரி 22 ஆம் தேதி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ப்ராணப்பிரதிஷ்டை முன்னிட்டு, நாடு முழுவதும் மக்கள் தொடர்பு இயக்கம் பாஜக சார்பாக ஏற்பாடு ஆக உள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து  10ஆம் தேதி வரை  மக்கள் அனைவரையும் வீடு வீடாக தொடர்பு கொள்ள வேண்டும்.  தொடர்பு கொண்டு ஹிமாலய சாதனையாக நமது ஹிந்துத்துவத்தை உணர்த்தும் விதமாக பல தசாப்தங்களை  கடந்து ராமர் கோயில்  பிரானப்பிரதிஷ்ட்டை  யாக அனைத்து வீடுகளுக்கும் -ஸ்ரீராமர் கோவில் படம்,  ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர கடிதம், கருவறையில் பூஜை செய்த அட்சதை ஆகியவற்றை வழங்க  இருக்கிறார்கள்.

மேலும், பிராணப் பிரதிஷ்டை நடக்கும் அன்று நகர, கிராமப்புற கோவில்களில் பூஜை செய்ய வேண்டும்.நாம் அனைவரும் நமது இல்லங்களில் , அன்று வீட்டுக்கு வெளியில் குறைந்தது 5 தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம்  நமக்கு இன்னொரு தீபாவளியாக  நினைத்து  இரவு வெடி வெடிக்க வேண்டும். இந்த தேசம் முழுவதும், கிராமம் தோறும், நகரம் தோறும் இதனை ஒரு பண்டிகை தினமாக அனுஷ்டிக்க வேண்டும். கூடுதலாக ஒரு வார்டுக்கு ஒரு கோவில் வீதம் கோவிலில் பூஜைக்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து, கோவிலில் பூஜை ஏற்பாடு செய்ய தயார்படுத்த வேண்டும். 

நமது அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டும் அல்லாது கோவில் பூசாரிகள், சமுதாயத் தலைவர்கள், பிற கட்சிகளில் இருக்கும் இந்து உணர்வாளர்கள் பஜனை குழுவில் உள்ளவர்கள் அனைவரையும் இணைத்து இந்த பணியினை செய்வது உத்தமம். 
ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்!

- Dr. K. சுதா, கல்வியாளர்