அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை
judgement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த வழக்கில் திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, ஜூன்.2:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2023 டிசம்பர் மாதம் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளியாக அறியப்பட்ட ஞானசேகரன் என்பவருக்கு 30 ஆண்டு கடுங்கட்டாய சிறைத் தண்டனை விதித்து சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு, ஐந்து மாதங்களுக்குள் தீர்ப்புக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு குறித்த குறிப்பு :
கடந்த 2023 டிசம்பர் 23ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவியை சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகி ஞானசேகரன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் குற்றவாளி என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் வெளியில் வரமுடியாத சிறைதண்டணை அறிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்திருக்கும் பேட்டியில்,
"பெண்களை இழிவாகக் கருதும் சமூக விரோதிகளுக்கு இது தகுந்த பாடமாக இருக்கும். முதலமைச்சர் கூறியபடி, அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து, நீதிமன்றம் சரியான தண்டனையை வழங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
சட்டத்துறையினரின் பார்வையில், இந்த வழக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும், பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்கத் தூண்டக்கூடிய தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.