கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட, நோய் கிருமிகள் அழிய, சகோ.மோகன் சி லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை

Nalumavadi News

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட, நோய் கிருமிகள் அழிய, சகோ.மோகன் சி லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தில்  மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் சுமார் 50,000  பேர்களுடன் சகோதரர் மோகன் சி லாசரஸ் இணைந்து பரவி வரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட நோய் கிருமிகள் அழிய சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் மாதம் தோறும் கடைசி  சனிக்கிழமைகளில் திறப்பின் வாசல் உபவாச கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்கள் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூடி வந்து உணவு உண்ணாமல் உபவாசத்துடன் ஜெபம் ஏறெடுப்பது வழக்கம். 

இந்த கூட்டத்தில் கேன்சர் வியாதி மற்றும் பல்வேறு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்ப பிரச்சினைகள், வீட்டின் தேவைகள், திருமண காரியங்கள், நாட்டின் அரசியல்வாதிகள், அரசாங்கத்தை நடத்தக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் நமது இந்திய நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி சுபிட்சமாக வாழ்வது ஆகியவை குறித்து சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த மாதம் தற்போது இந்தியாவில் வெகு வேகமாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் குறித்து கூட்டத்திற்கு வந்திருந்த சுமார் 50,000 பேர்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையானது சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் ஏறெடுக்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை இயேசு விடுகிறார்கள் ஊழியத்தின் மேலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார்.

இதேபோல் கடந்த மாதம் நடைபெற்ற திறப்பினவாசல் உபவாச ஜெபத்தில்  பெகல்ஹாம்  தீவிரவாதிகள் தாக்குதல் குறித்தும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி ஏற்படவும் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் ஜெபித்தார்கள். அதன் விளைவாக மறுநாளே போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.