நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா!

nazareth

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா!

நாசரேத் டிச 06: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. 

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து   கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். மாணவிகள் வேதபாடம்  வாசித்து, சிறப்பு பாடல்கள் பாடினர்.  மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல், ஒய்வு பெற்ற ஆசிரியை  விஜேந்திரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியை சுவீட்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தமிழ்நாடு திறந்த  நிலை பல்கலைக்கழக செவிலியர் பட்டயப் பயிற்சி  தேர்வில் முதலிடம் பெற்ற  மாணவி கார்த்திகாவுக்கும்,வேதாகம தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தூய யோவான் பேராலய சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயசந்திரன் நன்றி கூறினார்.