தூத்துக்குடியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்விக்கு பணி நிறைவு பாராட்டு விழா
Doctor News

பணி நிறைவு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்விக்கு மருத்துவதுறை அலுவலர்கள் சார்பில் தூத்துக்குடியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி பணி நிறைவு பெற்றதை தொடந்து மருத்துவதுறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொன்ரவி, கோவில்பட்டி சுகாதார மாவட்ட அலுவலர் வித்யா, மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி டீன் கிருஷ்ணவேணி, சித்த மருத்துவ கல்லூரி மருந்து உற்பத்திதுறை தலைவர் மேபல், ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் உஷா, கரிகாலவேலன், தேசிய சித்த மருத்துவத்தின் முன்னாள் தமிழ்நாடு இயக்குனர் மீனாகுமாரி, ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி மாசானமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
33 ஆண்டு கால மருத்துவ சேவையை பாராட்டி ராஜசெல்விக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆயுஷ் மருத்துவ அலுவலர் ரவிந்திரன், உதவி மருத்துவ அலுவலர்கள் ஜாண்மோசஸ், ரதிசெல்வம், லட்சுமிகாந்த் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் ரூபன் நன்றி கூறினார்.