நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 21-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

nazareth

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 21-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

நாசரேத்,டிச.08:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருகிற 21-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட் டம் நடைபெறுகிறது.

 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர்அருகிலுள்ள நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழியங்கள் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்து மஸ் கொண்டாட்டங்கள் வெகு விமர்சனமாக நடை பெற்று வருகிறது. அது போல இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட் டம் வருகிற 21-ம்தேதி முதல் துவங்குகிறது.

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வரு கிற 21-ஆம் தேதி வியாழக் கிழமை பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத் துவமனை நோயாளிகளு க்கு கிறிஸ்துமஸ் புத்தாடை கள், கிறிஸ்துமஸ் விருந்து கள்,கிறிஸ்துமஸ் கேக்கு கள் பரிமாறப்படுகிறது.

வருகிற டிச.23 ஆம் தேதி சனிக்கிழமை நாலுமாவடி சுற்று  வட்டாரத்திலுள்ள 6  ஆயிரம் ஏழை,எளிய மக்க ளுக்கும்,மாற்றுத்திறனாளி களுக்கும் கிறிஸ்துமஸ் புத்தாடைகள்,  இலவசமாக மூன்று சக்கர சைக்கிள்கள், இலவசமாகதையல்இயந்தி ரங்கள் வழங்கப்படுகிறது.

டிச. 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு சென்னை சாம் ராஜ்குமார் குழுவின ரின் வில்லிசை கலைநிகழ் ச்சி நாலுமாவடி புதுவாழ்வு சபை சி.எஸ்.ஐ. ஆலய வளா கத்தில் குரும்பூர்- சண்முக புரம் சேகரகுரு கமல்சன் தலைமையில் நடைபெறுகிறது.

வருகிற டிச. 25 ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்து மஸ் தினத்தன்று காலை யில் நாலுமாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்று வட்டாரத்திலுள்ள 3 ஆயிரம் பேர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து அறுசுவையுடன் வழங்கப்படுகிறது.

டிச.28 ஆம்தேதி வியாழக் கிழமை கிறிஸ்துமஸ், புத் தாண்டை முன்னிட்டு ஆண் கள்,பெண்கள்மற்றும்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாரத்தான் சைக்கிள் போட் டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இதில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.