புல்வாவெளி, ராமச்சந்திராபுரம், பழையகாயல் பகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் - ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினர்

Thoothukudi ADMK

புல்வாவெளி, ராமச்சந்திராபுரம், பழையகாயல் பகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் - ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினர்

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், புல்வாவெளி, ராமச்சந்திராபுரம் பழைய காயல் ஆகிய பகுதிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர். 

கனமழை கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அதிமுகவின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கிட அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தபோது உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ அதிமுக சார்பில் சிறப்பு பார்வையாளராக தூத்துக்குடியில் முகாமிட்டு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் உடன் இணைந்து மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு அதிமுக சார்பில் உதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று 22.12.2023 தூத்துக்குடி மாவட்டம், புல்வாவெளி, ராமச்சந்திராபுரம், பழையகாயல் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு அதிமுகவின் நிவாரண பொருட்களையும் உணவுகளையும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன் ஆர்பி உதயகுமார் ஆகியோர் வழங்கினர். அப்போது அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தஞ்சை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சூர்ய பிரகாஷ், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர் காசிராஜன், வக்கீல் சரவண பெருமாள், டைகர் சிவா, ஆகியோர் உடன் இருந்தனர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறி வாழ்த்தினார்.