பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை! சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார்

nazareth

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை! சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார்

நாசரேத்,டிச.11:பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் வி ழாவினை  சேகரத் தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார். 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் வரு டந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்குவது வழக்கம்.அதே போல் இந்த ஆண்டும்  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேகரத் தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.சபை ஊழியர் ஸ்டான்லி வரவேற்றார். ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கப்பட்டன. இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ராபர்ட், ஞானராஜ்,சேகர செயலாளர் மோகன்சிங், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டீபன், கிம்காம் ,ஆலய பணியாளர் டிக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ் தலைமையில்  சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.