நாசரேத்தில் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் விழா!

nazareth

நாசரேத்தில் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் விழா!

நாசரேத்,டிச.25:நாசரேத்தில் கிறிஸ்துமஸ் விழாவினை  முன்னிட்டு ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி சார்பாக இயேசு பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நாசரேத் திருமறையூரிலுள்ள காதுகேளாதோர் பள்ளி, மனவளர்ச்சி குன்றிய பள்ளி மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றில் வசிக்கின்ற 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி மற்றும் முதியோர்களுக்கு புத்தாடையை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் வழங்கினார். 

இநிகழ்வில் கல்லூரி முதல்வர் முனை வர் ஜெயக்குமார், காப்பக பொறுப்பாளர்கள் வன மோகன்ராஜ், மெட்டில்டா, ஜெஸி கரோலின் மற்றும்  பொறியியல் கல்லூரித்  துறைத்தலைவர்கள் முனைவர்கள் ஆக்னஸ், வினோதா, நிஷா, ஜெனிபர் ஜாண், ஜெமில்டா, ஜீலியட், ரூபன் கிளாட்வின் உதவி பேராசிரியர்கள் ஜென்சி, ஜெயபிரிடா, எமிலி எஸ்தர், பிரேமா, எஸ்தர் ஜெனிபா, வினோதினி, ரஞ்சினி, பமிலா, ஷெர்லின், பிரவின்குமார், ரூபா ஞானசெல்வம், ஏஞ்சல் பிரித்திமா, ஷிலா, ஜோஸ் சுந்தர் மற்றும் கல்லூரி பணியாளர்கள் ஆல்வின், பிரதீப், ஜாண் பாஸ்கர், ஜெபசிங், தனசிங், ஞானராஜ், ரூஸ்வெல்ட், குளோரியா, பேன்சி, ஜான்சி, சரஸ்வதி, ஷைனி ஆகியோர் கலந்து கொண்டனர்.