நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

nazareth

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

நாசரேத்,ஜன,15:நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு  கவிதை, கட்டுரை, கோலம் போன்ற போட்டிகளும் , கயிறு இழுத்தல், பானை உடைத்தல்  உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடந்தது.  தொடர்ந்து பொங்கலிட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.  

ஏற்பாடுகளை   தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர்  கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன், உடற்கல்வி இயக்குனர்  விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.