நாசரேத் சுற்று வட்டார பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய, விடிய புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் !

nazareth

நாசரேத் சுற்று வட்டார பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய, விடிய புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் !

நாசரேத்,ஜன. 01:நாசரேத் சுற்று வட்டார  பகுதி  கிறிஸ்தவ ஆலயங்களில்  புத்தாண்டு சிறப்பு ஆராதனை விடிய, விடிய  நடந்தது. உலகம் முழுவதும்  உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு  சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 

தூத்துக்குடி-நாசரேத் திருமண் டலத்தின் தலைமைப் பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலயத் தில் இரவு 11:30 மணிக்கு பழைய வருட ஆராதனை பேராலய உதவி குரு பொன் செல்வின் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. நடு இரவு 12 மணிக்கு  புத்தாண்டு பிறப்பு பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையும் பேராலய தலைமைகுரு  ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிகுரு பொன் செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு ஆகியோர்  முன்னிலையில் நடந்தது.  இதில் மக்கள் புத்தாடைகள் அணிந்து  திரளாக பங்கேற்றனர். ஆராதனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். காலை 9 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை பாடல் ஆராதனையாக நடைபெற்றது. இவ்வாராதனை பேராலய தலைமை குரு  ஹென்றி ஜீவானந்தம், உதவிகுரு பொன் செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு ஆகியோர்  முன்னிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து அருட்செய்தி வழங்கினார்.

நாசரேத்  அசெம்பிளி  ஆப் காட் சபையில் பாஸ்டர் எட்வின் பிரபாகர் தலைமையில்  புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. நாசரேத் அருகிலுள்ள  பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் தில் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நடைபெற்றது. பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு நவராஜ் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி முன்னிலையில் நடந்தது. மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமை யில் சபைஊழியர் ஜெனோ முன்னி லையில் நடந்தது.

வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகர குரு ஞானசிங் எட்வின் தலைமையில் சபைஊழியர் ஜான்வில்சன் முன்னி லையில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை பரிசுத்த திருவிருந்து ஆராதனையுடன் நடந்தது. ஆராதனை முடிவில் சபை ஊழியர்களுக்கு சபை மக்கள் சார்பில் ஊழியர் சந்திப்பு நடைபெற்றது.

மேலும் நாசரேத் சுற்றுப்புற பகுதிக ளான வகுத்தான்குப்பம், ஓய்யான்குடி, பாட்டக்கரை,கச்சனாவிளை, வாழையடி, பிள்ளையன்மனை, ஆசீர்வாதபுரம், கடையனோடை , மணிநகர், அகப்பை குளம்,வெள்ளமடம்,  தைலாபுரம்  உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. ‌திருமறையூர் மறுரூப ஆலயத்தில் புத்தாண்டு  ஆராதனை நடந்தது.சேகர தலைவர் ஜாண்சாமுவேல் தலைமை வகித்து தேவ செய்தியை அருளினார். சபை ஊழியர்  ஸ்டான்லி ஜாண்சன் துரை முன்னிலைவகித்தார்.புத்தாண்டு பரி திருவிருந்து ஆராதனையில் ஐ.எம். எஸ் பொறுப்பாளர் பொன்னுசாமி  தேவ செய்தி அருளினார். ஆராதனை முடிவில் ஊழியர்களுக்கு சேகர தலைவர்‌ ஜாண் சாமுவேல் ,சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன்துரை, ஆலயப் பணியாளர் ஆபிரகாம் ,ஆர்கனிஸ்ட் ஜோயல் கோல்டுவின் ஆகியோர்களுக்கு சபை‌ மக்கள் சார்பில் வரவேற்பு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் டி.சி மெம்பர்கள் ஜெயபால்,தேவதாஸ்,ஜாண்சேகர்,பிரவீன்குமார்,பெஞ்சமீன் செல்வராஜ்,‌ புஷ்பலதா, சரோஜினி சுந்தர்சிங்   மற்றும்  சபை மக்கள் கலந்து கொண்டனர்.