சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் சிறுப்பாடு, அத்திமரபட்டி, சத்யாநகர், காலங்கரை கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள்

chennai christian college

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் சிறுப்பாடு, அத்திமரபட்டி, சத்யாநகர், காலங்கரை கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள்

சிறுப்பாடு, அத்திமரபட்டி, சத்யாநகர், காலங்கரை கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் - சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சமூக பணித்துறை வழங்கியது  

நாசரேத், ஜன. 01: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுப்பாடு, அத்திமரபட்டி, சத்யாநகர், காலங்கரை ஆகிய கிராமங்களில் உள்ள 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் வழங்கப்பட்டது.

சென்னை கிறிஸ்தவ கல்லூரி சமூக பணித்துறை உதவி பேராசிரியர் முனைவர் சுதர்சன் தலைமையில் பிலிப், லீனா மற்றும் புள்ளியல் துறை மாணவர்கள் கார்த்திகா, பியூலா, ஜோன்ஸ், பால் சாலொமோன் ஆகியோர் சென்னை வாலன்டியர்ஸ் உடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுப்பாடு, அத்திமரபட்டி, சத்யாநகர், காலங்கரை ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு  பெட்ஷீட் மற்றும் சானிடரி நாப்கின் போன்ற நிவாரண பொருட்களை  வழங்கினர்.