நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நாளை ஜன.01ம் தேதி புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்!

Naalumaavadi

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நாளை ஜன.01ம் தேதி புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்!

நாசரேத்,டிச.31:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் ஜன. 01 நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழியத்தில் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் ஜன. 01ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ்  அளிக்கிறார். 

நிறைவாக சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் உடன் ஊழியர்கள் செய்து வருகின்றனர். கூட்டம் முடிந்ததும் வெளி யூர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.