தேச விரோத கருத்துக்களை பேசி வந்ததால் குண்டு வைத்தேன் - கிறிஸ்தவ சபை கூடத்தில் குண்டு வைத்ததாக சரணடைந்த மார்டின்

kerala kundu vetippu

தேச விரோத கருத்துக்களை பேசி வந்ததால் குண்டு வைத்தேன் - கிறிஸ்தவ சபை கூடத்தில் குண்டு வைத்ததாக சரணடைந்த மார்டின்

கேரள மாநிலம் கொச்சியில் இன்று கிறிஸ்தவ கூடம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததில் ஒருவர் உயிரிழந்தார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய,மாநில புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் கொச்சின் பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடனைந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தாம்தான் காரணம் என்றும், யகோவா சபையில் கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். சபையின் கருத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை. சபையில் தேச விரோத கருத்துக்கள் பேசப்படுகிறது. நானும் திருத்தி பார்த்துவிட்டேன் அவர்கள் திருந்துவதாக இல்லை. அதனால்தான் இப்படியொரு சம்பவம் நடத்தினேன் என்று ஒரு வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்டினை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரத்தை வேறு கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.