நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி!

nazareth

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி!

நாசரேத், பிப்.17:நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். 

சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ் நாராயணன் மூக்குப்பீறி கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர் ஆனந்த ஜோதி பாலன், உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணை தலைவர் விவின் ஜெயக்குமார், ரமேஷ் ஆகி யோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.