புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

nazareth

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  புவ்வாவிளையில் ஆண்டு விழா வட்டாரக்கல்வி அலுவலர்கள்  ஜெயயாலன் துரைராஜ், பால்சுந்தரி, ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. 

வட்டார வள மைய மேற்பார்வையாளர்  வனிதா சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். மற்றும் பழையகாயல் ஊராட்சி மன்றத் தலைவர்  செல்வகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன், பள்ளி மேலா ண்மைக் குழுத் தலைவர்  மாலதி, வார்டு கவுன்சிலர்  சண்முகையா ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

பள்ளி தலைமையாசிரியர்  செல்வ மணி வரவேற்று பேசினார்.  நாகபிரபா,பியூலாரோஸ்லின்,ஆனந்தி,மீனாட்சி, பிச்சம் மாள்,கமலா ஆகிய ஆசிரி யர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி, மா ணவ மாணவிகளுக்கு ஜெயபால் துரைராஜ் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியை நாக பிரபா  நன்றி கூறினார்.